| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3663 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( மணியும் பொன்னுமிழக்கப் பெற்ற மதிலாளே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே, திருநாட்டிலிருக்கும் படியில் ஒன்றுங்குறையாதே யெழுந் தருளியிருக்கும் சௌரிப் பெருமாளுடைய திருவடிகளையே உபாயமும் உபேயமுமாகப் பற்றுங்கள் என்றாராயிற்று) 8 | அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8 | Thana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தன் திருவடிகளைப் பணிந்தவர் களெல்லார்க்கும் Aniyan aagum,அணியன் ஆகும் - அந்தரங்கனா யிருப்பன் Piniyum saaraa,பிணியும் சாரா - வியாதி முதலானவைகளும் அணுகமாட்டா Piravi keduthu aalum,பிறவி கெடுத்து ஆளும் - ஸம்ஸார ஸங்கத்தை யறுத்து அடிமை கொள்வன் Mani pon aayndha madhil soo'l,மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் - ரத்னங்களும் பொன்களும் பொருந்தின மதிளாலே சூழப்பட்ட Thirukkannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தி யெழுந்தருளிளிருக்கிற Paramaetti than paatham,பரமேட்டி தன் பாதம் - பரம புருஷனுடைய திருவடிகளை |