Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3664 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3664திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார்) 9
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9
Vedham nvaar virumbum,வேதம் நாவர் விரும்பும் - வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான
Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற
Aadiyaanai,ஆதியானை - முழுமுதற்கடவுளான எம்பெருமானை
Adainthaarkku,அடைந்தார்க்கு - ஆச்ரயித்தவர்களுக்கு
Allal illai,அல்லல் இல்லை - துக்கமொன்று மில்லையாகும்
Naalum paadham paniya,நாளும் பாதம் பணிய - (அப்பெருமானுடைய) திருவடிகளை எப்போதும் ஸேவிக்கு மளவில்
Pini thaniyum,பிணி தணியும் - நோய்கள் அறும்
Ekam saaraa,ஏகம்சாரா - பாவங்கள் சேரமாட்டா
Ini,இனி - இப்படியான பின்பு
En kurai,என் குறை - என்ன குறையுண்டு? (ஒரு குறையுமில்லை)