திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3664 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3664திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார்) 9
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9
பதவுரை Show / Hide
Vedham nvaar virumbum,வேதம் நாவர் விரும்பும் - வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான
Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற
Aadiyaanai,ஆதியானை - முழுமுதற்கடவுளான எம்பெருமானை
Adainthaarkku,அடைந்தார்க்கு - ஆச்ரயித்தவர்களுக்கு
Allal illai,அல்லல் இல்லை - துக்கமொன்று மில்லையாகும்
Naalum paadham paniya,நாளும் பாதம் பணிய - (அப்பெருமானுடைய) திருவடிகளை எப்போதும் ஸேவிக்கு மளவில்
Pini thaniyum,பிணி தணியும் - நோய்கள் அறும்
Ekam saaraa,ஏகம்சாரா - பாவங்கள் சேரமாட்டா
Ini,இனி - இப்படியான பின்பு
En kurai,என் குறை - என்ன குறையுண்டு? (ஒரு குறையுமில்லை)