| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3666 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( பலனுரைத்துத் தலைக்கட்டவேண்டிய இப்பாசுரத்தில் “இப்பத்தும் பாடி பணிமிளவன்தாள்களே” என்று உபநெசரூபமாகவே யருளிச்செய்தாரெனினும் இதுவும் பயனுரைப்பதாகவே தலைக்கட்டும்) 11 | பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர் மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11 | Vinai patru,வினை பற்று - துக்க ஸம்பந்தம் Paadu saara,பாடு சாரா - அருகில் கிட்டாதபடி Ara venduveer,அற வேண்டுவீர் - அது கொலையவேணு மென்றிருப்பவர்களே Maadam needu GuruKoor,மாடம் நீடு குருகூர் - மாடமாளிகைகள் உயர்ந்த திருநகரியிலே அவதிர்த்த Sadagopan,சடகோபன் - ஆழ்வார் Sol,சொல் - அருளிச்செய்த thamizh aayiraththul ippattum,தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் - தமிழ் பாடல் ஆன ஆயிரத்துள் இப் பத்தும் – Paadi,பாடி - வாயாரப்பாடி Aadi,ஆடி - அதற்குச் சேர நர்த்தன்ம் பண்ணி Avan thaalgalae panimin,அவன் தாள்களே பணிமின் - அப்பெருமானுடைய திருவடிகளையே தொழுங்கள் |