| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3667 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (கொடிய தாபத்திலே அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேக வர்ஷத்தையோ எதிரிபாரிப்பது ஸஹஜந்தானே; அதுபோல ஆழ்வாரும் தம்முடைய ஸாம்ஸாரிக தாபங்களெல்லாம் தொலையப்பெறும் ஸமயமாகையாலே இப்போது காளமேகப் பெருமாளைப் பெற்று ஸூகிக்கிறபடியைத் தெரிவித்தருளுகிறார். இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்; இவரையொழிய மற்றொன்று கதியிலம்…..வேறுதுணையுடையோமல்லோ மென்று அப்பெருமாளைப் பற்றுகிறார்.) 1 | தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர் நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய் காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1 | தாள தாமைரை தடம்அணி,Thaala thaamarai tadam ani - தாளுரத்தையுடைய தாமரைகள் நிறைந்த தடாகங்களை அலங்காரமாகக் கொண்ட வயல் திருமோகூர் நாளும் மேவி,Vayal thirumogoor naalum mevi - வயல்களாலே சூழப்பட்ட திருமோகூரிப்பதியை நித்திய வாஸஸ்தலமாகக் கொண்டு நன்கு அமர்ந்து நின்று,Nangu amarnthu ninru - மிகவும் உகப்போட அங்குப் பொருந்தி நிற்குமவனாய் கமலம் கண்,Kamalam kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய் அசுரரை தகர்க்கும தோளும் நான்கு உடை,Asurarai thakarkkum tholum naangu udai - அசுரர்களை புடைக்க வல்ல நான்கு திருத்தோள்களையு முடையனாய் கனி வாய்,Kani vaai - கனிந்த திருப்பவளத்தை யுடையனாய் ஸேவை ஸாதிக்கின்ற சுரி குழல்,Suri kuzhal - சுருண்ட திருக்குழல் கற்றையை யுடையனாய் காளமேகத்தை அன்றி,Kaalamegaththai anri - காளமேகப் பெருமாளைத் தவிர்த்து மற்று ஒன்று கதி இலம்,Matru ondru gathi ilam - வேறொரு துணையுடையோ மல்லோம் |