| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3668 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (திருமோகூரெம்பெருமானுடைய திருவடிகளல்லது வேறுபுகலுடையோமல்லோம் எந்நாளும் என்கிறாரிப்பாட்டில்.) 2 | இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2 | ஈன் தண் துழாயிள் அலங்கல் அம் கண்ணி,Een than thuzhaayil alangal am kanni - பரம யோக்யமான துழாய் மாலையை யுடையனாய் ஆயிரம் பேர் உடையம்மாள்,Aayiram per udaiyammaal - ஆயிரந் திருநாமங்களையுடைய ஸ்வாமியாய் அடி நிழல் தடம் அன்றி,Adi nizhal tadam anri - திருவடி நிழலாகிற பொய்கை தவிர நலம் கொள் நால்மறை வாணர்கள் வாழ் திருமோகூர் நலம் கழலவன்,Nalam kol naalmurai vaanargal vaazh thirumogoor nalam kazhalavan - விலக்ஷணர்களான வைதிகர்கள் வாழுமிடமான திருமோகூர்லே திருவடிகள் பொருந்தியிருக்கப்பெற்றவனான எம்பெருமானுடைய மற்று ஒன்று கதியை,Matru ondru kathiyai - வேறொரு கதியை யாம் எம்மைக்கும் இலம்,Yaam emmaikkum ilam - யாம் ஒரு பிறப்யிலும் உடையோ மல்லோம். |