திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3670 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (தேவரும் முனிவரும் ’இடர்கெட எம்மைப் போந்தளியாய்’ என்று பலகாலுஞ்சொல்லி யேத்தி தொடருகின்றார்களாம்.) 4 | இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4 | பதவுரை Show / Hideஇடர் கெட போந்து எம்மை அளியாய் என்று,Edar keda pondhu emmai aliyaai enru - எம்மிடர் தீரும்படியாக எழுந்தருளி எம்மை ரக்ஷித்தருள வேணுமென்று பலகாலுஞ் சொல்லி படர் கொள் பாம்பு அணை,Padar kol paambu anai - விர்வான சேஷ சயனத்திலே பள்ளி கொள்வான்,Palli kolvaan - பள்ளி கொள்பவனான பெருமானுடைய சுடர் கொள் சோதியை,Sudar kol sothiyai - தேஜ புஞ்ஜயமான திருமேனியை ஏத்தி,Aethi - தோத்திரம் செய்து திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியிலே இடர் அடி பரவுதும்,Edar adi paravudhum - நம்மிடர் கெடுமாறு அவன் திருவடிகளைத் துதிப்போம்; தேவரும் முனிவரும் தொடர,Thevarum munivarm tudara - தேவர்களும் முனிவர்களும் அநுவர்த்தித்து ஆச்ரயிக்கைக்காக . தொண்டீர் வம்மின்,Thondeer vamin - பகதர்களே! நீங்களும் வாருங்கள் |