| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3671 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அவன் எழுந்து அருளி நின்று அருளின திரு மோகூரை ஆஸ்ரயித்து அனுபவிக்க வாருங்கோள் -என்கிறார்.) 5 | தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர் எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5 | நம் சுடர் ஒளி,Nam sudar oli - நாம் அநபவித்தற்குரிய தேஜோமய திவ்யமங்கள விகரஹத்தையுடையனாய் ஈன் கரும்பொடு,Een karumpodu - இனிய கரும்போடு கூட பெரு செந்நெல் விளைய,Peru sennel vilaiya - பெரிய செந்நெற் பயிர்கள் விளையும்படியாக ஒரு தனி முதல்வன்,Oru thani mudhalvan - உலகுககெல்லாம் அத்விதீய காரண பூதனாய் கொண்ட,Konda - தான் பர்கரஹித்தருளின கோயிலை,Koyilai - ஸன்னிதியை வலம் செய்து,Valam seithu - பிரதக்ஷிணம் பண்ணி அண்டம் உலகு அளந்தவன்,Andam ulagu alandhavan - அண்டங்களையுடைய மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான் இங்கு கூத்து ஆடுதும்,Ingu koothu aadudhum - இங்கே கூத்தாடுவோம்; அணி திருமோகூர்,Ani thirumogoor - அழகிய திருமோகூர்லே எண் திசையும்,En thisaiyum - எட்டுத் திசைகளிலும் தொண்டீர் வம்மின்,Thondeer vamin - தொண்டர்களே! நீங்களும் வாருங்கள். |