Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3672 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3672திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (திரு மோகூரிலே நின்று அருளின -பரம ஆப்தனானவனுடைய திருவடிகள் அல்லது வேறு நமக்கு அரண் இல்லை என்கிறார்.) 6
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6
கூத்தன்,Koothan - அழகிய நடையையுடையனாய்
வாய்த்த தண்பணை வளம் வயல் சூழ் திருமோகூர் ஆத்தன்,Vaaytha thanpanai valam vayal soozh thirumogoor aathan - நெருங்கிக் குளிர்ந்த நீர் நிலங்களாலும் செழித்த வயல்களாலும் சூழப்பட்ட திருமோகூரில் எழுந்தருளியருப்பவனான ஆப்தனுடைய
கோவலன்,Kovalann - பசுக்களின் பின்னே சென்று அவற்றை ரக்ஷிக்குமவனாய்
குதற்று வல் அசுரர்கள் கூற்றம்,Kuthatru val asurargal kootram - பீடையைப் பண்ணும் கொடிய அசுரர்களுக்கு மருத்யுவாய்
தாமரை அடி அன்றி,Thamarai adi anri - பாதாரவிந்தங்களைத் தவிர்த்து
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவாக்கும் இன்பன்,Eththum nangatkumm amararkkum munivakkum inban - துதி செய்கின்ற நமக்கும் தேவர்களுக்கும் இருடிகளுக்கும் ஆனந்தகரனாய்
மறறு அரண் இலம்,Marru aran ilam - மற்றொரு ரக்ஷையுடையோ மல்லோம்.