Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3674 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3674திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது; அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார்.) 8
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8
உயர் கொள் சோலை,Uyar kol solai - உன்னதமான சோலைகளையும்
தயதரதன் பெற்ற மரகதம் மணி தடத்தினை,Dayadharan petra maragatham mani tadathinai - தசரத சக்ரவர்த்தி பெற்ற மரகத மணித் தடாகம் போன்றவனான எம்பெருமானை,
ஒண் தடம் அணி,On tadam ani - அழகிய தடாகங்களையும்
ஒளி திருமோகூர்,Oli thirumogoor - அலங்காரமாக உடைத்தான அழகிய திருமோகூர்லே,
அடியவர்,Adiyavar - அடியீர்கள்!
ஆயிரம் பெயர்கள் உடைய,Ayiram peyargal udaiya - ஸஹஸ்ர நாமப்ரதிபாத்யனாய் அடைந்து வந்து தொழுமின் வந்து கிட்டித் தொழுங்கோள்;
வல் அரக்கர்,Val arakkar - புக்கு அழுந்த கொடிய ராக்ஷசகர்கள் புகுந்து மடியும்படியாக
துயர் கடிது கெடும்,Thuyar kadidu kedum - கிலேசமெல்லாம் விரைவில் தொலைந்து போம் (அப்படித் தொழுதால்).