| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3675 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.) 9 | மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9 | மணி தடத்து அடி,Mani tadathu adi - அழகிய தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும் அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன்,Asurarai endrum thunikum val arattan - அசுரர்களை எப்போதும் நிரஸிக்கின்ற பெருமிடுக்கனுமான எம் பெருமான மலர் கண்கள்,Malar kankal - தாமரைப் பூப் போன்ற திருக்கண்களையும் உறை,Urai - நித்தியவாம் பண்ணுமிடமான பவளம் செவ்வாய்,Pavalam sevvai - பவளம் போன்ற சிவந்த அதரத்தையும் பொழில் திருமோகூர் நம்முடைய நர் அரண்,Pozhil thirumogoor nammudaiya nar aran - சோலைவளம் மிக்க திருமோகூர்பதியாகிற நமக்கு நல்ல ரக்ஷகமான திவ்ய தேசம் அருகேயுள்ளது அணிகொள் நால் தடம் தோள் தெய்வம்,Anikol nal tadam thol dheivam - அழகிய நான்கு திருத்தோள்களையும் உடைய தெய்வமாயிருப்பவனும் நணித்து நாம் அடைந்தனம்,Nanithu naam adainthanam - இதனை நாம் பஜிக்கப் பெற்றோம். |