Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3675 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3675திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.) 9
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9
மணி தடத்து அடி,Mani tadathu adi - அழகிய தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும்
அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன்,Asurarai endrum thunikum val arattan - அசுரர்களை எப்போதும் நிரஸிக்கின்ற பெருமிடுக்கனுமான எம் பெருமான
மலர் கண்கள்,Malar kankal - தாமரைப் பூப் போன்ற திருக்கண்களையும்
உறை,Urai - நித்தியவாம் பண்ணுமிடமான
பவளம் செவ்வாய்,Pavalam sevvai - பவளம் போன்ற சிவந்த அதரத்தையும்
பொழில் திருமோகூர் நம்முடைய நர் அரண்,Pozhil thirumogoor nammudaiya nar aran - சோலைவளம் மிக்க திருமோகூர்பதியாகிற நமக்கு நல்ல ரக்ஷகமான திவ்ய தேசம் அருகேயுள்ளது
அணிகொள் நால் தடம் தோள் தெய்வம்,Anikol nal tadam thol dheivam - அழகிய நான்கு திருத்தோள்களையும் உடைய தெய்வமாயிருப்பவனும்
நணித்து நாம் அடைந்தனம்,Nanithu naam adainthanam - இதனை நாம் பஜிக்கப் பெற்றோம்.