| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3676 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (அடியார்களின் விஷயத்தில் அபீஷ்டவிக்ரஹ பர்க்ரஹம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பெருமான் வர்த்திக்கிற திருமோகூர்த் திருப்பதியின் திருநாமத்தைச் சொல்லி ஏத்துங்கோ என்று, தம்மோடு அந்வயமுடையார்க்கு உரைத்தருளுகிறார்.) 10 | நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர் தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால் காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10 | நமக்கு நாம் அடைந்த நல் அரன் எனறு ஸாதுக்களான தேவர்கள்,Namakku naam adaintha nal aran enru sadukal ana dhevargal - நல் அமரர் நமக்குப் புகலாக நாம் அடைந்த நல்ல ரக்ஷகமான தலம் இதுவென்று எழுந்து அளிப்பான்,Ezhundhu alippaan - கிளர்ந்து ரக்ஷிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால்,Theemai seyyum val asurari anji sendru adainthaal - தங்களுக்குப் பொல்லாங்கு அஞ்சி வந்தது பணிந்தால் காமரூபம் கொண்டு,Kamarupam kondu - திருவுள்ளமான வடிவைக் கொண்டு திருமோகூர் நாமமே,Thirumogoor naamame - திருமோகூரிப்பதியின் பெயரையே நமர்காள நவின்று எண்ணுமின் ஏத்துமின் .,Namarkal navindru ennumin aeththumin - நம்முடையவர்களே! பயின்று நினையுங்கோள், வாய் விட்டுமேந்துங்கள் |