Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3676 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3676திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (அடியார்களின் விஷயத்தில் அபீஷ்டவிக்ரஹ பர்க்ரஹம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பெருமான் வர்த்திக்கிற திருமோகூர்த் திருப்பதியின் திருநாமத்தைச் சொல்லி ஏத்துங்கோ என்று, தம்மோடு அந்வயமுடையார்க்கு உரைத்தருளுகிறார்.) 10
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10
நமக்கு நாம் அடைந்த நல் அரன் எனறு ஸாதுக்களான தேவர்கள்,Namakku naam adaintha nal aran enru sadukal ana dhevargal - நல் அமரர் நமக்குப் புகலாக நாம் அடைந்த நல்ல ரக்ஷகமான தலம் இதுவென்று
எழுந்து அளிப்பான்,Ezhundhu alippaan - கிளர்ந்து ரக்ஷிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால்,Theemai seyyum val asurari anji sendru adainthaal - தங்களுக்குப் பொல்லாங்கு அஞ்சி வந்தது பணிந்தால்
காமரூபம் கொண்டு,Kamarupam kondu - திருவுள்ளமான வடிவைக் கொண்டு
திருமோகூர் நாமமே,Thirumogoor naamame - திருமோகூரிப்பதியின் பெயரையே
நமர்காள நவின்று எண்ணுமின் ஏத்துமின் .,Namarkal navindru ennumin aeththumin - நம்முடையவர்களே! பயின்று நினையுங்கோள், வாய் விட்டுமேந்துங்கள்