Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3678 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3678திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ப்ராப்யமான திருவனந்தபுரத்திலே சென்று சேருகைக்கு இடையூறுகள் பல உண்டே; அவையெல்லாம் திருநாமஸங்கீர்த்தனம் பண்ணின வளவிலேயே தொலையும்; அங்கே புக வாருங்கோள் என்று அநுகூலரையழைக்கிறார்.) 1
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1
கேசவா என்ன இடர் ஆய எல்லாம் கெடும்,Kesavaa enna idar aaya ellam kedum - கேசவ நாமத்தைச் சொன்ன வளவில் துன்பமானவை எல்லாம் தொலைந்துபோம்
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்,Vidam udai aravil pallli virumbinaan - நச்சரவினனை மேல் விரும்பிப் பள்ளி கொள்ளுமவன் வர்த்திக்கிற
நாளும் கொடுவினை செய்யும்,Naalum koduvinai seyyum - நிரந்தரமாகக் கொடுமைகளைச் செய்ய நிற்கிற
சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்,Surumbu alatrum tadam udai vayal - வண்டுகள் ஆரவாரிக்கின்ற தடாகங்கள் நிறைந்த கழன்கிளையுடைய
கூற்றின் தமர்களும் குறுககில்லார்,Koottin thamargalum kurugakillaar - யமபடர்களும் அணுகமாட்டாது ஓடிப்போவர்கள்; (ஆன பின்பு)
அனந்தபுரம் நகர்,Ananthapuram nagar - திருவனந்தபுரமாகிற திவ்ய தேசத்தை
இன்றே புகுதும்,Endrae pukuthum - இன்றே போய்ப் புகுவோம்.