Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3679 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3679திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (திருவனந்தபுரத் தெம்பெருமானுடைய திருநாமமொன்றே ஸஹஸ்ர முகமான ரக்ஷயைப் பண்ணுமென்றார்.) 2
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2
குன்று நேர் மாடம்,Kunru neer maadam - மலை போன்ற மாடங்களினருகே
எழுமையும் ஏதம் சாரா,Ezhumaiyum aedham saara - ஏழேம் பிறப்பும் ஸம்ஸார தோஷம் எட்டாது
குருந்து சேர் செருந்தி புன்னை,Kurundhu ser serundhi punai - குருந்த மரங்களோடு சேர்ந்த சுரபுன்னை மரங்களும் புன்னை மரங்களும்
மாயன் நாமம்,Maayan naamam - அத்திருப்பதி எம்பெருமானுடைய திருநாமங்களில்
ஒன்றும்,Ondrum - ஏதேனும் ஒன்றாகிலும்
மன்று அலர் பொழில் அனந்தபுரம் நகர்,Manru alar pozhil ananthapuram nagar - மன்றிலே அலறும் படியான சோலைகளையுடைய திருவனந்தபுரத்தை
ஓர் ஆயிரம் ஆகும்,Or aayiram aakum - ஒன்றே ஆயிரமாகிக் காரியஞ் செய்யும் பெருமையுடையது;
இன்று போய் புகுதிரி ஆகில்,Endru pooi pukuthiri aagil - இன்றே சென்றடைவர்களாகில்
உள்உவர்க்கு,Ulluvarkku - இத்தையநுஸந்திப்பார்க்கு
ஒம்பர் ஊரே,Ombur oorae - அத்திருவனந்புரந்தானே பரமபதமாயிருக்கும்.