Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3680 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3680திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (பிரதிபந்தங்கள் தொலைவதற்கு இன்ன திருநாமமென்று ஒரு நிர்ப்பந்தமில்லை; ஆயிரந்திருநாமங்களுள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லவமையும் என்கிறார்.) 3
ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே–10-2-3
புள் ஊரும்,Pul oorum - பெரிய திருவடியை ஊர்தியாகக் கொள்ளுமவனாய்
சிக்கென புகுதிரி ஆகில்,Sikkena pukuthiri aagil - திடமான அத்யவஸாயத்துடன் சென்று சேழ்வீர்களால்,
கொடியம் அஃதே,Kodiyam akhthae - அப்பெரிய திருவடியையே கொடியாகவுமுடையனாய்
நோய் வினைகள் எல்லாம் தீரும்,Noy vinaigal ellam theerum - நோயும் வினைகளுமானவையெல்லாம் தீரும்;
உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்,Ulagu ellam undu umizhndhaan - உலகங்களையெல்லாம் ஒரு கால் உண்பதும் மற்றொரு கால் உமிழ்வதுஞ் செய்தவான எம்பெருமான்
நாம் திண்ணம் அறிய சொன்னோம்,Naam thinam ariya sonnom - (இவ்விஷயததை உங்களுக்கு) நாம் திண்ணமாக அறியும்படி தெரிவித்தோம்;
சேரும் தண் அனந்தபுரம்,Serum than ananthapuram - நித்யவாஸஞ் செய்யுமிடான குளிர்ந்த திருவனந்தபுரத்தை
பேரும் ஒரு ஆயிரத்துள்,Perum oru aayiraththul - (அப்பெருமானுடைய) ஸஹஸ்ரநாமங்களுள்
நீர் ஒன்று பேசுமின்,Neer onru pesumin - நீங்கள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லுங்கள்.