| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3680 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (பிரதிபந்தங்கள் தொலைவதற்கு இன்ன திருநாமமென்று ஒரு நிர்ப்பந்தமில்லை; ஆயிரந்திருநாமங்களுள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லவமையும் என்கிறார்.) 3 | ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில் தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே–10-2-3 | புள் ஊரும்,Pul oorum - பெரிய திருவடியை ஊர்தியாகக் கொள்ளுமவனாய் சிக்கென புகுதிரி ஆகில்,Sikkena pukuthiri aagil - திடமான அத்யவஸாயத்துடன் சென்று சேழ்வீர்களால், கொடியம் அஃதே,Kodiyam akhthae - அப்பெரிய திருவடியையே கொடியாகவுமுடையனாய் நோய் வினைகள் எல்லாம் தீரும்,Noy vinaigal ellam theerum - நோயும் வினைகளுமானவையெல்லாம் தீரும்; உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்,Ulagu ellam undu umizhndhaan - உலகங்களையெல்லாம் ஒரு கால் உண்பதும் மற்றொரு கால் உமிழ்வதுஞ் செய்தவான எம்பெருமான் நாம் திண்ணம் அறிய சொன்னோம்,Naam thinam ariya sonnom - (இவ்விஷயததை உங்களுக்கு) நாம் திண்ணமாக அறியும்படி தெரிவித்தோம்; சேரும் தண் அனந்தபுரம்,Serum than ananthapuram - நித்யவாஸஞ் செய்யுமிடான குளிர்ந்த திருவனந்தபுரத்தை பேரும் ஒரு ஆயிரத்துள்,Perum oru aayiraththul - (அப்பெருமானுடைய) ஸஹஸ்ரநாமங்களுள் நீர் ஒன்று பேசுமின்,Neer onru pesumin - நீங்கள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லுங்கள். |