திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3682 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3682திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவனந்த புரத்தில் ஆஸ்ரயிக்கும் அவர்கள் அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்று கொண்டாடி -அப்படியே நீங்களும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார்.) 5
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5
பதவுரை Show / Hide
புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலகள் தூவி,Punnayam seithu nalla punalodu malargal thoo vi - பக்தி கொண்டு நல்ல தீர்த்தத்தையும் புஷ்பங்களையும் பணிமாறி
செறி பொழில்,Seri pozhil - செறிந்த சோலைகளையுடைய திருவனந்தபுரத்திலே அனந்தபுரத்து
அண்ணலார்,Annalaar - ஸ்வாமியினுடைய
எந்தை நாமம் எண்ணுமின்,Endhai naamam ennumin - எம்பெருமானது திருநாமங்களைச் சிந்தனை செய்யுங்கள். (அப்படிச் செய்யுமளவில்)
கமலம் பாதம்,Kamalam paadam - திருவடித் தாமரைகளை
அணுகுவார்,Anuguvaar - கிட்டுமவர்கள்
இப்பிறப்பு அறுக்கும் அப்பால்,Eppirappu arukkum appaal - இக் கொடிய ஸம்ஸாரத்தைத் தொலைத்தருள்வன்மேலும்,
அமரர் ஆவார்,Amarar aavaar - நித்யஸூரிகளோடொப்பர்;
நாம் திண்ணம் அறிய சொன்னோம்,Naam thinam ariya sonnom - (இதனை) நாம் திடமாகத் தெரிவித்தோம்.