| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3682 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவனந்த புரத்தில் ஆஸ்ரயிக்கும் அவர்கள் அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்று கொண்டாடி -அப்படியே நீங்களும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார்.) 5 | புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5 | புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலகள் தூவி,Punnayam seithu nalla punalodu malargal thoo vi - பக்தி கொண்டு நல்ல தீர்த்தத்தையும் புஷ்பங்களையும் பணிமாறி செறி பொழில்,Seri pozhil - செறிந்த சோலைகளையுடைய திருவனந்தபுரத்திலே அனந்தபுரத்து அண்ணலார்,Annalaar - ஸ்வாமியினுடைய எந்தை நாமம் எண்ணுமின்,Endhai naamam ennumin - எம்பெருமானது திருநாமங்களைச் சிந்தனை செய்யுங்கள். (அப்படிச் செய்யுமளவில்) கமலம் பாதம்,Kamalam paadam - திருவடித் தாமரைகளை அணுகுவார்,Anuguvaar - கிட்டுமவர்கள் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்,Eppirappu arukkum appaal - இக் கொடிய ஸம்ஸாரத்தைத் தொலைத்தருள்வன்மேலும், அமரர் ஆவார்,Amarar aavaar - நித்யஸூரிகளோடொப்பர்; நாம் திண்ணம் அறிய சொன்னோம்,Naam thinam ariya sonnom - (இதனை) நாம் திடமாகத் தெரிவித்தோம். |