திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3683 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3683திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (அயர்வறுமமரர்களும் வந்து அடிமை செய்கிறது திருவனந்தபுரத்திலே யாதலால் திருநாட்டிலுங்காட்டில் பரமப்ராப்யம் திருவனந்தபுரம்; நாமும் இங்கே சென்று அடிமை செய்யத்தகுமென்கிறார்.) 6
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர் நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும் குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6
பதவுரை Show / Hide
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனார்,Kumaranar dhaathai thunbam thudaitha kovindanaar - முருகனது தந்தையான சிவபிரானது துன்பத்தைப் போக்கியருளின பெருமானாய்
அகப்பணி செய்தவர் விண்ணோர்,Agappani seithavar vinnor - அந்தரங்கமான பணிவிடைகளைச் செய்யுமவர்கள் நித்ய முக்தர்களாயிருப்பார்;
அமரர் ஆய் திரிகின்றார்கட்கு ஆதி,Amarar aay thirigindraarkatku aadhi - அமரரென்று பேர் பெற்றுத் திரிகின்றவர்களுக்கும் தலைவனாயிருக்குமவன்
நமர்களோ,Namargaloo - தம்முடையவர்களே!
சேர் அனந்தபுரத்து,Ser ananthapurathu - நித்யவாஸஞ் செய்கிற திருவனந்தபுரத்திலே
சொல்ல கேண்மின்,Solla kearnmin - நாம் சொல்வதைக்கே உங்கோள்;
அமரா கோன் அர்ச்சிக்கின்று அங்கு,Amaraa kon archikkindraangu - ஸ்ரீ ஸேனாபதியாழ்வான் ஆராதிக்க அதற்குப் பொருத்தமாக
நாமும் போய் நணுக வேண்டும்,Naamum pooi nanuga vendum - அவர்களோடு நாமும் கூடிக் கைங்கரியம் பண்ண வேண்டும்.