| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3684 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸர்வேச்ரன் திருக்கண் வளர்ந்கருளுகிற திருவனந்தபுரத்தே சென்று அடிமை செய்யய்ப பெற்றால் எல்லாத் துக்கங்களும் தீருமென்கிறார்.) 7 | துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான் மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7 | உலகு உயிர் தேவும் மற்றும் உலகங்களையும்,Ulagu uyir theevum matrum ulagangalaiyum - (மநுஷ்யாதி) ப்ராணிகளையும் தேவஜாதிகளையும் மற்றும் மஹதார் பதார்த்தங்களையும் மடை தலை வளை பாயும் வயல் அணி அனந்தபுரம்,Madai thalai valai paayum vayal ani ananthapuram - நீர் நிலங்களிலே மீன்கள் களித்துப் பாயா நின்ற வயல்களை அலங்காரமாகவுடைய திருவனந்தபுரத்திலே துடைத்த கோவிந்தனாரே,Thudaitha kovindanaarae - ஒன்றொழியாமல் ஸம்ஹர்த்த பெருமாள் தானே பாம்பு அணை பள்ளி கொண்டான்,Paambu anai pallli kondaana - சேஷ சயனத்திலே பள்ளி கொண்டருளா நின்றான்; (அவ்விடத்தே சென்று) படைத்த எமபரம மூர்த்தி,Padaitha emparam moorthi - (அவற்றையெல்லாம் மறுபடியும்) படைத்தருளின பரம புருஷன்; (அப்பெருமாள்) கடைத்தலை சீய்க்கப் பெற்றால கடு வினை களையலாம்,Kadu vinai kalaiyaalaam - திருவாசல் விளக்குதல் முதலிய கைங்கரியங்களைப் பண்ணப் பெற்றால் கொடிய பாவங்களைப் போக்கப் பெறலாம். |