Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3684 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3684திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸர்வேச்ரன் திருக்கண் வளர்ந்கருளுகிற திருவனந்தபுரத்தே சென்று அடிமை செய்யய்ப பெற்றால் எல்லாத் துக்கங்களும் தீருமென்கிறார்.) 7
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7
உலகு உயிர் தேவும் மற்றும் உலகங்களையும்,Ulagu uyir theevum matrum ulagangalaiyum - (மநுஷ்யாதி) ப்ராணிகளையும் தேவஜாதிகளையும் மற்றும் மஹதார் பதார்த்தங்களையும்
மடை தலை வளை பாயும் வயல் அணி அனந்தபுரம்,Madai thalai valai paayum vayal ani ananthapuram - நீர் நிலங்களிலே மீன்கள் களித்துப் பாயா நின்ற வயல்களை அலங்காரமாகவுடைய திருவனந்தபுரத்திலே
துடைத்த கோவிந்தனாரே,Thudaitha kovindanaarae - ஒன்றொழியாமல் ஸம்ஹர்த்த பெருமாள் தானே
பாம்பு அணை பள்ளி கொண்டான்,Paambu anai pallli kondaana - சேஷ சயனத்திலே பள்ளி கொண்டருளா நின்றான்; (அவ்விடத்தே சென்று)
படைத்த எமபரம மூர்த்தி,Padaitha emparam moorthi - (அவற்றையெல்லாம் மறுபடியும்) படைத்தருளின பரம புருஷன்; (அப்பெருமாள்) கடைத்தலை சீய்க்கப் பெற்றால
கடு வினை களையலாம்,Kadu vinai kalaiyaalaam - திருவாசல் விளக்குதல் முதலிய கைங்கரியங்களைப் பண்ணப் பெற்றால் கொடிய பாவங்களைப் போக்கப் பெறலாம்.