| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3687 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவன் திரு நாமங்களில் ஏதேனும் ஒரு திரு நாமத்தைச் சொல்ல அடிமை செய்கைக்கு பிரதிபந்தகங்கள் எல்லாம் தானே போம் என்று சொல்லி முடித்து திருவனந்த புரத்திலே போய் எம்பெருமானுக்கு அடிமை செய்யும் மஹாத்மாக்கள் ஆரோ தான் என்று கொண்டு அவர்களைக் கொண்டாடுகிறார்.) 10 | மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும் ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10 | மாதவா என்ன,Madhava enna - திருமாலே என்று சொன்ன வளவிலே நல்ல சாந்தொடு விளக்கம் தூபம்,Nalla santhodu vilakkam thoombam - நல்ல சந்தன தீப தூபங்களையும் வினைகள் தானே மாய்ந்து அறும்,Vinaihal thaanae maayndhu arum - பாவங்கள் தானே தொலைந்தொழியும்; தாமரை மலர்கள் ஆய்ந்து கொணடு நாளும் ஏந்த வல்லார்,Thamarai malargal aayndhu kondu naalum aentha vallaar - தாமரைப் பூக்களையும் சேகரித்துக் கொண்டு சென்று நாடோறும் துதி செய்ய வல்ல பக் தர்கள் ஏய்ந்த பொன்மதின் அனந்தபுரம் நகர் எந்தைக்கு என்று,Ayndha ponmathin ananthapuram nagar endhaikku enru - பொருந்தின பொன்மதினையுடைத்தான திருவனந்தபுர நாதனுக்கென்று ஸங்கல்பித்து என்றும் அந்தம் இல் புகழினார் எந்நாளும்,Enrum andham il pugazhinaar ennnaalum - அழிவில்லாத புகழை யுடையராவர். |