| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3690 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (பிரிவை நினைத்துப் புலம்புகிற படியைக் கண்டு ஒருவாறு வருத்தம் தீரும்படி அடுத்தடுத்து ஆரத் தழுவிக் கொண்டான் கண்ணபிரான்; இது தான் விச்லேஷப்ராகலாவ காலத்து ஸம்ச்லேஷமாகையாலே இது துக்கமாகத் தோற்றுமே யல்லது ஸுகமாகத் தோற்றாதாகையாலே கனாக்கண்டு விழித்தாற்போலே நோவுபட நின்றமையைச் சொல்லிக் கதறுகிறாள்.) 2 | தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச் சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2 | தகவிலை தகவிலை யே நீ கண்ணா,Thagavilai thakavilai ye nee kannaa - (கண்ணா நீ தகவிலை தகவிலையே) அகம் உயிர்,Agam uyir - உள்ளீடான பிராணனுடைய தட முலை புணர் தொரும்,Thadamulai punar thoram - முலைத்தடங்களை நீ ஆலிங்கனம பண்ணுகிற க்ஷணந்தோறும் அகம் அகம் தோறும்,Agam agam thorum - மர்ம ஸ்தானங்கள் தோறும் புணர்ச்சிக்கு ஆரா,Punarccikku aaraa - அந்தப் புணர்ச்சியீனளவல்லாத உள் புக்கு,Ul pukku - உள்ளே பிரவேசித்து சுகம வெள்ளம்,Sugama vellam - ஆனந்த ஸாகரமானது விசும்பு இறந்து,Visumbu irandhu - ஆகாசத்தையும் கடந்து ஆவியின் பரம் அல்ல,Aaviyin param alla - ஆத்மாவுக்குப் பொறுக்கு வொண்ணாதபடியா யிரா நின்றது! அறிவை மூழ்க்க சூழ்ந்து,Arivai mooza suzhnthu - அறிவு கெடும்படி போய் பெருகினதாகி அந்தோ,Antho - ஐயோ!: அது கனவு என நீங்கி,Adhu kanavu ena neengi - (அப்போதே) அது கனவு தானென்னும் படியாகக் கழிந்து இனி மிக மிக உன்னை பிரிவை ஆம் ஆல்,Ini miga miga unnai pirivai aam aal - இனி மேன் மேலும் உன்னைப் பிரியும் படி யாகும் அந்தோ! (ஆதலால்) ஆங்கே,Aangey - அந்த நிலைமையிலே வேட்கை,Vedkai - ஆசையானது நின் பசு நிரை மேய்க்க போக்கு வீவ,Nin pasu nirai meykka pookku veeva - பசுக்களை மேய்க்கைக்காக நீ போவது தவிர வேணும். |