திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3695 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3695திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கண்ணா! உன்னைப் பிரிந்து படுகிற துக்கம் மாத்திரமேயன்று காண்; தேனுகன் பிலம்பன் காளியனென்எந் தீப்பப்பூடுகள் நிறைந்த விடங்களிலன்றோ நீ திரியப் போவது; அங்கே கம்ஸனேவின ஆஸுரப்ர’ருதிகள் வந்து கூடினால் என்னாகுமோவென்று அதைப் பற்றின கிலேகமும் அளவற்றது காண் என்கிறாள்.) 7
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத் துணை முலை பயந்து என தோள்கள் வாட மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய் ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7
பதவுரை Show / Hide
மா மணிவண்ணா,Maa manivanna - நீலமணி நிறத்தனான கண்ணபிரானே!
நீ போய்,Nee poy - நீ சென்று
என் வெள் வளைமேகலை கழன்று வீழ,En vel valai megala kazhandru veezha - எனது கைவளைகளும் அரையில் மேகலைகளும் பொருந்தாமல் கழன்று விழும்படியாகவும்,
ஆ மகிழ்ந்து உகந்து,Aa magizhndhu ugandhu - பசுக்களிடத்திலேயே பரம ப்ரிதியை வைத்து
தூ மலர் கண் இணை முத்தம் சோர,Thoo malar kann inai mutham soora - செவ்வித்தாமரை போன்ற கண்களினின்று முத்துப் போன்ற நீர்த்தாரை பெருகவும்,
அவைமேய்க்கின்று,Avaimeykkindru - அவற்றை நீ மேய்க்கிற காலத்தில்
உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில்,Unnodu asurargal thalaip peyil - உன்னோடு (கம்ஸனேவினை பல) அசுரர்கள் (போர் செய்யக்) கூடினால்
துணை முலை பயந்து,Thunai mulai bayandhu - முலைகளிரணடும் விவர்ணமாகி
ஆங்கு யவன் கொல் (என்று),Aangu yavan kol (endru) - அங்கு என்னாகுமோ வென்று (அதிசங்கை பண்ணி)
தோள்கள் வாட,Tholgal vaada - தோள்கள் வாடும்படியாகவும்
எமது உயிர்,Emadhu uyir - என் ஆத்மாவானது
உன் செங்கமல வண்ணம் மெல் மலர் அடி நோவ,Un sengamala vannam mel malar adi nova - உனது பரமஸுகமாரமான பாதாரவிந்தங்கள் நோகும் படியாக
அழல் மெழுகில் ளுக்குவோம்,Azhal mezhugil lukkuvom - நெருப்பில் மெழுகு போலே உருகி வேவாநின்றது.