| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3698 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (“அவத்தங்கள் விளையும்’’ என்றதைக் கேட்ட கண்ணபிரான் * அதிஸ்நேஹ, பாபசங்கீ* என்கிறபடியே உங்களுடைய அளவுகடந்த அன்பினால் இப்படி அதிசங்கை யுண்டாகின்றதே யன்றி, உண்மையில் எனக்கு யாதோரவத்யமும் விளையாது; வணாக அஸ்தாநே அங்ஞச வேண்டர் வாளாவிருங்கள்’’ என்று சொல்ல, அப்படியன்று காண்; உள்ளபடி சொல்லுகிறோம் கேளாய் என்கிறார்கள்.) 10 | அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும் உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால் திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10 | செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே,Sem kani vaai engal aayar deve - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடைய எங்களாயர் குலக்கொழுந்தே! உடன் திரிகிலையும் என்றெனறு,Udan thirikilaiyum endrenru - அவனோடுங் கூடித் திரியமாட்டாய் நீ யென்று இதைப் பலகாலும் நினைத்து வகையர் அசுரர்கள்,Vagayar asurargal - வலிமை மிக்க அசுரர்கள் கஞ்சன் ஏவ,Kanjan eva - கம்ஸனுடைய ஏவுதலால் என்னுடை ஆவி ஊடுறவேம்,Ennudai aavi ooduraveem - என்னெஞ்சு உள்உற வேவா நின்றது; தவத்தவர் மறுக நின்று –உழிதருவர்,Tavathavar maruga nindru –uzhitharuvar - முனிவர்கள் குடல் குழம்பும்படி திரிவர்கள் அந்தோ என் சொல் கொள்,Antho en sol kol - நீயோ! என் சொல்லைக் கொள்ளாய்; உனக்கு தனிமையும் பெரிது,Unakku thanimaiyum peridhu - நீயோ மிகவும் துணையற்றிரா நின்றாய்; திவத்திலும்,Thivathilum - திருநாட்டிலிருப்பதிற் காட்டிலும் இராமனையும் உவர்த்தலை,Iraamanaiyum uvarthalai - ( உனக்குத் துணைவனான) பலராமனையும் நீ உகவாதவனாய் பசு நிரை மேய்ப்பு உவத்தி,Pasu nirai meippu uvathi - பகூட்டங்களை மேய்ப்பதையே நீ உகக்கின்றாயே. |