Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3700 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3700திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (உபய விபூதி நாதனாயிருந்துவைத்துப் பத்துடையடியவர்க் கெளிப்பனான எம்பெருமானுடைய திருவடிகள் பக்தியோக ஸுலபமென்கிறார்.) 1
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1
கார்மேகம் வண்ணன்,Kaarmegam vannnan - காளமேக நிறத்தனாய்
கமலம் நயனத்தன்,Kamalam nayanathan - செந்தாமரைக் கண்ணாய்
தமோதரன்,Damodharan - தம்பாலே கட்டுண்டு அடியவர்க்கெளியனானவனுடைய
நீர்வானம் மண் எர் கால் ஆய் நின்ற,Neervaanam man er kaal aay nindra - பஞ்பூதஸவரூபியாய்
நேமியான்,Nemiyann - திருமொழியை யுடையனாய்
தாள்கள்,Thaalgal - திருவடிகளானவை
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையன்,Per vaanavargal pithattrum perumaiyan - பெரிய வானவர்களான நத்திய ஸூதிகள் வாய்வெருவும்படியான பெருமையை யுடையனாய் ( இப்படி உபய விபூ நாதனாய் வைத்து)
தவ நெறிக்கு,Thava nerikku - பக்தி மார்க்கத்திற்கு.
சார்வே,Saarve - எளியனவாம்