Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3701 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3701திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் தாள்கள் தவநெறிக்குச் சார்வே * என்று பொதுப்படையாக அருளிச் செய்தார்; அது தம்மளவில் பலித்தபடியை யருளிச்செய்கிறார் இப்பாட்டுத் தொடங்கி.) 2
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2
வனத்து இமையோர்க்கும் பெருமையன்,Vanathu imaiyorkkum perumaiyan - மேலுலகங்களிலுள்ள பிரமன் முதலானாரினும் பெருமை பெற்றவனாய்
என்றும் திருமெய் உறைகின்ற,Endrum thirumey uraiginra - எப்போதும் பிராட்டியானவள் தன் திருமேனியிலேயே வாழப் பெற்ற புண்டழீகாக்ஷன்
ஆகத்து அணையாதார்க்கு,Aagathu anaiyaadhaarkku - அவன் திருவுள்ளத்திலே கொள்ளப் பெறாதவர்ககு
செம் கண் மால் இங்கு இருமைவினை கடிந்து,Sem kan maal ingu irumaivinai kadindhu - இவ்விபதியிலே புண்யபாப ரூப உபய கருமளையும் போக்கி
காண்டற்கு அருமையன்,Kaandarku arumaiyan - காண முடியாதிருப்பவனாய்
நாளும் என்னை ஆள்கின்றான்,Naalum ennai aalkinraan - நாடோறும் என்னை அடிமைகொள்ளா நின்றான்