Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3702 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3702திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (எம்பெருமானுடைய திருவடிகளைச் சென்னிக்கணியாகக் கொண்டு அநுபவிக்கப் பெறேன்; இன ஸம்ஸாரம் மறுவலிடாது; என்னகுறை யுண்டென்கிறார்.) 3
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3
ஆழியான் ஆழ்கின்றான்,Aazhiyaan aazhinraan - கையுந் திருவாழியுமான பெருமாள் காத்தருளா நின்றான்;
வாள் கெண்டை ஒண் கண்,Vaal kendai on kan - ஒளியையுடைய கெண்டை போன்றழகிய கணகளையுடையளாய்
பிறவி துயர் கடிந்தோம் (அதனாலே),Piravi thuyar kadindom (adhanaale) - பிறவித் துன்பங்கள் தொலையப் பெற்றோம்;
மடம் பின்னை தன் கேள்வன்,Madam pinnai than kelvan - குணவதியான நப்பின்னைக்கு நாயகனானவனுடைய
மீள்கின்றது இல்லை,Meelginrathu illai - இன ஸம்ஸார ஸம்பந்தம் மறுவலிடாது;
தாள் கண்டு கொண்டு,Thaal kandu kondu - திருவடிகளை ஸாக்ஷாத்கர்த்து
ஆரால் குறை உடையம்,Araal kurai udaiyam - இன ஆரைக் கொண்டு காரிய முடையோம்.
என் தலை மேல் பினைந்தேன்,En thalai mel pinaindean - ( அத் திருவடிகளை) என் தலை மீது அணியப் பெற்றேன்.