Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3704 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3704திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இப்பாட்டில் “கள்வம் பெரிதுடையன்” என்பது உயிர்நிலையான வாசகமாயிருக்கும். அப்பெருமான் என்திறத்தில் செய்தருள நினைத்திருக்குமவை ஒரு வராலறியப்போமோ? என்கிறார்.) 5
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5
என நெஞ்சம் கழியாமை,Ena nenjam kazhiyaamai - எனது நெஞ்சைவிட்டு அகலாதபடியான தன்மையை
பிறர்க்கு மெச்சப்படான்,Pirarkku mechappadaan - பிறர்க்குத் தனது குணங்களைக் காட்டிக் கொடாதவனாய்
நிச்சித்திருந்தேன்,Nischithirundhean - நிச்சயித்திருந்தேன்
கை சக்கரத்து அண்ணல,Kai sakkarathu annala - திருக்கையிலே திருவாழியைக் கொண்ட ஸ்வாமி
மெய் போலும் பொய் வல்லன்,Mey polum poy vallan - மெய் செய்வாரைப்போலே பொய் செய்ய வல்வலனாய்
கள்வம் பெரிது உடையன்,Kalvam peridhu udaiyan - நாமறியாதன பலவும் பாரியா நின்றான்
நாகத்து அணை யான் நமக்கு நச்சப்படும்,Naagathu anai yaan namakku nachchappadum - சேஷசாயியானவன் நமக்கு ப்ராப்யனாவன்.