திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3705 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3705திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இன்று வந்து அடிமைபுக்காரையும் “அல்வழக்கொன்று மில்லாவணி கோட்டியர் கோனபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்” என்று சொல்லும்படி நித்யாச்ர்தரைப் போலே விஷயீகாரிக்குமவன் திருவடிகளிலே விழப்பெற்றே னென்கிறார். 6
நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப் பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே–10-4-6
பதவுரை Show / Hide
நாகம் அணையானை,Naagam anaiyaanai - சேஷசயன்னாய்
மாகத்து இளமதியம் சேரும் சடையானை,Maagathu ilamadhiyam serum sadaiyaanai - ஆகாசத்திலுள்ள இளம் பிறை தங்குகின்ற சடையையுடைய சிவனை
ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு,Gnaanathaal aagathu anaipparkku - பக்தியாக வடிவெடுத்த ஞானத்தினால் நெஞ்சிலே வைத்து அநுபவிக்கும் முமுக்ஷீக்களுக்கு
பாகத்து வைத்தான் தன்,Paagathu vaiththaan than - தன் திருமேனியிலொரு பக்கத்திலே வைத்தவனான பகவானுடைய
நாள்தோறும்,Naalthorum - எப்போதும்
அருள் செய்யும்,Arul seyyum - அருள்செய்கின்ற ஸ்வாமியாய்
பாதம் பணிந்தேன்,Paadham panindean - திருவடிகளை வணங்கப் பெற்றேன்