Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3706 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3706திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுமவனான அப்பெருமானை இடைவீடின்றியநுவிக்குமாறு திருவுள்ளத்தை நோக்கி யருளிச் செய்கிறார்.) 7
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7
மணிநின்ற சோதி,Maninindra sothi - நீலரத்னத்தை யொத்த தேஜஸ்ஸை யுடையனாய்
பிறவி கெடுத்து ஆளும்,Piravi kedutthu aalum - நம்பிறவித் துன்பத்தைப் போக்கி அடிமை கொண்டருள்பவன்
மதுசூதன்,Madhusoodhan - விரோதி நிரஸந சீலனாய்
என் அம்மான்,En ammaan - அஸ்மத் ஸ்வாமியாய்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியான்,Ani nindra sempon adal aazhiyaan - தானே ஆபரணமாகப் போரும்படியாய்ச் சிவந்த பொன்போலே ஸ்ப்ருஹணீயனாய் மிடுக்கையுடையனான திருவாழியாழ்வானைக் கையிலேந்தினவனான பெருமான்
பிணி ஒன்றும் சாரா,Pini ondrum saaraa - ஸம்ஸாரக்லேசமொன்றும் தட்டாது
பரமபரம்பரணை நெஞ்சே நாளும் பணி,Paramaparamparanai nenje naalum pani - (ஆன பின்பு) அப்பரமபுருஷனை நெஞ்சமே! நித்யமும் வணங்கி யநுபவி