Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3707 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3707திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் “பணி நெஞ்சே! நாளும்” என்றவாறே உகந்திருந்தது நெஞ்சு; அதனைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அநுபவியென்கிறார்.) 8
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8
ஆழியான்,Aazhiyaan - சக்ரபாணியாய்
ஆழி அமரர்க்கும் அப்பாலான்,Aazi amararkkum appaalaan - கம்பீரர்களான நித்யஸூரிகளுக்கும் நிலமல்லாத மேன்மையையுடையனாய்
பாழிஅம் தோளால் வரை எடுத்தான்,Paazhiam tholaal varai eduththaan - (அப்பசுக்களுக்கு ஆபத்து வந்தபோது) மிடுக்குடைய அழகிய திருத்தோளாலே மலயை யெடுத்துக் காத்தவனான பெருமானுடைய
ஊழியான்,Oozhiyaan - ப்ரளயகாலத்தில் தானொரு வனெயுளனாய்
பாதங்கள்,Paadhangal - திருவடிகளை
ஊழிபடைத்தான்,Oozhipadaiththaan - காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் ஸங்கல்பித்தவனாய்
என் நெஞ்சே மற வாது வாழ் கண்டாய்,En nenje mara vaadhu vaazh kandaai - என் மனமே! ஒரு போதும் மறவாமல் நித்யாநுபவம் பண்ணி வாழ்வாயாக.
நிரைமேய்த்தான் பசுக்களை ரஷித்தவனாய்,Niraimeiththaan pasukkalai rashiththavanaai - வாழி இவ்வாழ்ச்சி நித்யமாயிடுக