| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3708 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாநஸமாதிபி:, நாராணாம் ஷிணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்றும், “ஒன்றியொன்ற நற்றவஞ்செய்து ஊழியூழிதோறெலாம் நின்று நின்றவன் குணங்களுள்ளி யுள்ளந் தூயராய், சென்று சென்று தேவதேவர் ளும்பரும்பரும்பராய், அன்றி யெங்கள் செங்கண் மாலை யாவர்காண வல்லரே” என்றும் சொல்லுகிறபடியே நெடுங்காலம் பாரிச்ரமப்பட்டுப் பெறவேண்டுமவனை அவருடைய நிர்ஹேதுக க்ருபையாலே காணப்பெற்றே னென்கிறார்.) 9 | கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9 | தொண்டே செய்து,Thonde seydhu - பரபக்தி முதலியவற்றைப் பண்ணி கமலம்மலர்பாதம் கண்டேன்,Kamalammalarpaadham kandean - (அவனன்றனது) பாதாரவிந் தங்களைக்காணப்பெற்றேன் என்று தொழுது வழியெழுக,Endru thozhudhu vazhiyezhuga - நித்ய கைங்காரியத்தைச் செய்து அதுவே யாத்திரையாய்ச் சொல்லும்படி காண்டலுமே,Kaandalumae - கண்டபோதே பண்டே,Pande - ஏற்கனவே (கீதாசாரியனானவப் போதே) வினை ஆயின எல்லாம்,Vinai aayina ellaam - விரோதியேன்று பேர் பெற்றவை யெல்லாம் பரமன் பணித்த பணி வகையே,Paraman panitha pani vagaiyae - ஸர்வேச்வரன் (ஸர்வஸாதாரணமாக) அருளிச் செய்த பாசுலரத்தின்படியே விண்டே ஒழிந்த,Vindae ozhindhu - வாஸனையோடே விட்டுப் போயின |