Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3709 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3709திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (ப்ரயோஜநாந்தரரர்களோ, உபாயாந்தர நிஷ்டர்களோ, ப்ரபந்தர்களோ யாராயினும் யாவாக்கும் எம்பெருமானே உபாயமென்று தலைக்கட்டுகிறார்.) 10
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10
வகையால் மனம் ஒன்றி,Vagaiyaal manam onri - சாஸ்திரங்களிற் சொல்லுகிறபடியே நெஞ்சையொருங்கப் பிடித்து
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்சநின்ற,Thisai thoaru amarargal sendru irainjanindra - நின்ற நின்ற திக்குக்கள் தோறும் பிரமன் முதலிய தேவர்கள் வந்து பணியும் படியான,
மாதவனை,Maadhavanai - திருமாலான தன்னை
நாளும்,Naalum - காலந்தோறும்
தகையான்,Thagaiyaan - ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமானுடைய
புது புகையால் விளக்கால் மலரால் நீரால்,Puthu pugaiyaal vilakkaal malaraal neeraal - விலக்ஷணமான தூப தீப புஷ்ப தீர்த்தங்களாலே
சரணம்தமர்கட்கு ஓர் பற்று,Saranamthamar kadku or patru - திருவடிகள் பக்தர்களுக்குச் சிறந்த புகலிடம்