Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3710 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3710திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11
பரம பரம்பரனை,Parama paramparanai - பராத்பரனையும்
தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Thodai anthaadhi or aayirathul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள்
மல் திண் தோள்,Mal thin thol - மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற
இப் பத்தும் கற்றார்க்கு,Ip paththum katraarkku - இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு
மாலை,Maalai - ஸர்வேச்வரனை
பற்று என்று பற்றி,Patru endru patri - தமக்குப் புகலாக வுறுதி யிட்டு
கண்ணன் கழல் இணை ஓர் பற்று,Kannan kazhal inai or patru - கண்ணனது உபயபாதங்கள்
வழுதி வளநாடன் சொல்,Vazhudhi valanaadan sol - ஆழ்வார் அருளிச்செய்த
ஆகும்,Aagum - ஒப்பற்ற ப்ராப்யமாகும்.