திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3718 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3718திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) ( “நாராயணத் திருநாமத்தையோ ஸ்ரீமத் பதத்தையோ அநுஸந்திக்க நாங்கள் அதிகாரிகளோ? மிகமிக நீசரான எங்களுக்கு அத்தனையதிகாரமுண்டோ?” என்று சங்கிப்பார்க்குச் சொல்லுகிறது இப்பாட்டு அதிகாரி நியதியில்லை; ஆரேனுமாகத் திருநாமத்தைச் சொல்லலாம். அப்படிச்சொல்லுவார் நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் என்கிறார்.) 8
சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8
பதவுரை Show / Hide
ஏதங்கள் சாரா,Aedhangal saaraa - ஒரு பொல்லாங்கும் வந்து கிட்டாது;
பேர் ஆர் ஓதுவார்,Per aar othuvar - திருநாமங்களை ஓதுமவர்கள் யாவ ரோ
நீர் ஆர் முகில் வண்ணன்,Neer aar mukil vannnan - நீர் நிரம்பிய மேகம் போன்றவனான எம்பெருமானுடையர்
ஆர் ஆ,Aar aa - அவர்கள் எது பிறப்பு ஏதியல்வாக நின்றவர்களாயினும்
அமரர்ஏ,Amarar - நித்ய ஸூரிகளோ டொப்பார்கள்