Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3720 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3720திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகத்தில், முதற்பாட்டில் திருமந்த்ரப்ரஸ்தாவம் செய்தருளினார் ; ஏழாம்பாட்டில் த்வயப்ரஸ்தாவம் செய்தருளினார். அதற்குமேலெல்லாம் பெரும்பாலும் சரமச்லோக ப்ரஸ்தாவமேயாயிருக்கிறது. *ஸர்வபாபேப்யோ மோஷயிஷ்யாமி* என்பதுதானே சரமச்லோகத்தின் ஸாரம். அது இப்பாட்டில் “வினை வல்லிருளென்னும் முனைகள் வெருவிப்போம்” என்று தலைக்கட்டப்படுகிறது.) 10
வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10
வினை,Vinai - கருமங்களென்ன
வெருவிப்போம்,Veruvippom - தாமே அஞ்சி அகன்றொழியும்
வல் இருள்,Val irul - கொடிய அஞ்ஞானமென்ன
சுனை நம் மலர்இட்டு,Sunai nam malarittu - சுனைகளிலுண்டான நல்ல பூக்களையிட்டு
என்னும் முனைகள்,Ennum munaigal - ஆகவிப்படி சொல்லப்படுகிற இத்திரங்கள்
நெடியான் நினைமின்,Nedhiyaan ninaimin - ஸர்வேச்வரனைச் சிந்தியுங்கள்