| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3722 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (நெஞ்சே! எம்பெருமான் இன்று நமக்குப் பேரருள் செய்யக் கோலா நின்றான் அதுவும் நாம் விதித்தபடியே செய்யவேணுமென்று நம்முடைய நியமனத்தை யெதிரிபாரா நின்றான்; அந்தோ! இஃது என்ன குணம்! இக்குணத்தையநுபவிக்க இந்நிலவுலகில் ஆளில்லாமையாலே நாம் திருநாட்டிலேபோய் மூதுவரோடு கூடியநுவிக்கலாமா? வருகிறாயா? என்று தம் திருவுள்ளத்தோடே உசாவுகிறார்.) 1 | அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1 | அருள் பெறுவார் அடியார் தம்,Arul peruvaar adiyaar tham - எம்பெருமானருளைப் பெறுவதையே நிரூபமாகவுடைய பாகவதர்களுக்கு நமது விதி வகையே,Namadu vidhi vagaiyae - நாம் வித்ததபடியே யாம்; (ஆன பின்பு) இனி,Ini - இனியொருநாளும் அடியனேற்கு,Adiyanekku - அடிமைப் பட்டிருக்கு மெனக்கு இருள் தருமா ஞாலத்துள் பிறவி,Irul tharumaa nyaalaththul piravi - இவ்விருள்தருமா ஞாலத்திற் பிறப்பை யான் வேண்டேன் நான் இச்சிக்கமாட்டேன் ஆழியான்,Aazhiyaan - திருவாழியை யுடையனான எம்பெருமான் மட நெஞ்சே,Mada nenjae - சபலமான மனமே! அருள் தருவான் அமைகின்றான்,Arul tharuvaan amaikindraan - க்ருபை பண்ணுவானாகப் பொருந்தியிரா நின்றான்; நீ மருள் ஒழி,Nee marul ozhi - இங்கேயிருந்து அநுபவிக்க வேணுமென்கிற வொரு மருளைத் தவிரப்பார் அது,Adhu - அப்படி க்ருபை பண்ணுவது வாட்டாற்றான் அடி வணங்கு,Vaattattraan adi vanangu - திருவாட்டாற்றொம் பெருமானது திருவடிகளை வணங்கு. |