Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3723 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3723திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இப்பாட்டும் நெஞ்சோடே ஸம்வாதமாயிருக்கிறது.) 2
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2
மாஞாலம்பிறப்பு அறுப்பான்,Maanjaalampirappu aruppaan - இருள் தருமா ஞாலத்தில் ஜன்ம ஸம்பந்தத்தைத் தொலைப்பதற்காக
பழ வினைகள் பற்று அறுத்து,Pazha vinaihal patru aruththu - அவித்யை கருமம் முதலான அநாதியான தொல்லைகளை யறுத்து
வாட்டாற்றான் அடி வணங்கி,Vaattattraan adi vanangi - திருவாட்டாற் றெம்பெருமானுடைய திருவடிகளை வணங்கி
நாட்டாரோடு இயல்வுஒழிந்து,Naattaarodu iyalvuzhinthu - உலகத்தாரோடு ஸஹவாஸத்தையும் தவிர்த்து
நாரணனை,Naaranana - ஸ்ரீமந் நாராயணனை
நண்ணினம்,Nanninam - கிட்டப்பெற்றோம்
கேசவன் எம்பெருமானை,Kesavan emperumaanai - கேசவனான பெருமானை
பாட்டு ஆயபலபாடி,Paatu aayapadapaadi - பாட்டானவை பலவும்பாடி
மடநெஞ்சே கேட்டாயே,Mada nenjae kaettaiye - நெஞ்சே! பெற்ற பேற்றின் கனத்தைக் கண்டாயே.