| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3723 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இப்பாட்டும் நெஞ்சோடே ஸம்வாதமாயிருக்கிறது.) 2 | வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப் பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2 | மாஞாலம்பிறப்பு அறுப்பான்,Maanjaalampirappu aruppaan - இருள் தருமா ஞாலத்தில் ஜன்ம ஸம்பந்தத்தைத் தொலைப்பதற்காக பழ வினைகள் பற்று அறுத்து,Pazha vinaihal patru aruththu - அவித்யை கருமம் முதலான அநாதியான தொல்லைகளை யறுத்து வாட்டாற்றான் அடி வணங்கி,Vaattattraan adi vanangi - திருவாட்டாற் றெம்பெருமானுடைய திருவடிகளை வணங்கி நாட்டாரோடு இயல்வுஒழிந்து,Naattaarodu iyalvuzhinthu - உலகத்தாரோடு ஸஹவாஸத்தையும் தவிர்த்து நாரணனை,Naaranana - ஸ்ரீமந் நாராயணனை நண்ணினம்,Nanninam - கிட்டப்பெற்றோம் கேசவன் எம்பெருமானை,Kesavan emperumaanai - கேசவனான பெருமானை பாட்டு ஆயபலபாடி,Paatu aayapadapaadi - பாட்டானவை பலவும்பாடி மடநெஞ்சே கேட்டாயே,Mada nenjae kaettaiye - நெஞ்சே! பெற்ற பேற்றின் கனத்தைக் கண்டாயே. |