| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3726 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (அர்ச்சிராதி மார்க்கத்தாலே போகப் பெறுகை தமக்கு ஸமீபித்து விட்டதென்பதை மிகுந்த களிப்புடன் கூறுகிறார்.) 5 | வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே–10-6-5 | வான் ஏற வழி தந்த,Vaan era vazhi thantha - அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக விருக்கிற பணி வகையே,Pani vakaiye - பண்டு பணித்திருந்தபடியே வாட்டாற்றான்,Vaataatraan - திருவாட்டாற்றெம்பெருமான் நான் ஏற பெறுகின்றேன்,Naan era perugindraen - நான் மேலே செல்லப் பெறாநின்றேன். நெஞ்சே நரகத்தை நகு,Nenjae naragaththai nagu - மனமே! ஸம்ஸார பூமியை நோக்கிச் சிரித்திடுசெழு பறவை தான் ஏறி,Sirithiduselu paravai than eri - அழகிய கருடன் மீதேறித் திரியுமவனான பெருமானுடைய தேன் ஏறு மலர்துளபம் திகழ் பாதன்,Then eru malarthulabam thigal paathan - தேன் மிகுந்த துளவமலர்விளங்கும் திருவடிகளை யுடையனாய் திரிவான தாள் இணை என் தலை மேலே,Thirivaan thaal inai en thalai maelae - உபயபாதங்கள் என் தலை மேலாயின |