Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3726 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3726திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (அர்ச்சிராதி மார்க்கத்தாலே போகப் பெறுகை தமக்கு ஸமீபித்து விட்டதென்பதை மிகுந்த களிப்புடன் கூறுகிறார்.) 5
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே–10-6-5
வான் ஏற வழி தந்த,Vaan era vazhi thantha - அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக விருக்கிற
பணி வகையே,Pani vakaiye - பண்டு பணித்திருந்தபடியே
வாட்டாற்றான்,Vaataatraan - திருவாட்டாற்றெம்பெருமான்
நான் ஏற பெறுகின்றேன்,Naan era perugindraen - நான் மேலே செல்லப் பெறாநின்றேன்.
நெஞ்சே நரகத்தை நகு,Nenjae naragaththai nagu - மனமே! ஸம்ஸார பூமியை நோக்கிச்
சிரித்திடுசெழு பறவை தான் ஏறி,Sirithiduselu paravai than eri - அழகிய கருடன் மீதேறித் திரியுமவனான பெருமானுடைய
தேன் ஏறு மலர்துளபம் திகழ் பாதன்,Then eru malarthulabam thigal paathan - தேன் மிகுந்த துளவமலர்விளங்கும் திருவடிகளை யுடையனாய்
திரிவான தாள் இணை என் தலை மேலே,Thirivaan thaal inai en thalai maelae - உபயபாதங்கள் என் தலை மேலாயின