| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3727 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (தாம் பெற்ற பேறுகளை ஒன்றிரண்டு மூன்றென்று எண்ணுகிறார். திருவடிகளை என் தலைமேலே வைத்தருளினான், அழகிய திருக்கண்களாலே என்னைக் குளிர நோக்கி யருளா தின்றான்; ஒருகாலும் என்னெஞ்சில் நின்றும் நிலை பேரான் – இவையன்றோ நான்பெற்ற பேறுகளென்கிறார்.) 6 | தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான் நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான் மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6 | தாள் இணைகள் தலை மேல,Thaal inaihal thalai mel - அவனது உபய பாதங்கள் எனது தலைமேலுள்ளன மலை மாடத்து வாட்டாறு,Malai maadaththu vaattaaru - மலைபோன்ற மாடங்களையுடைய திருவாட்டாற்றிலே தாமரை கண் என் அம்மான்,Thaamarai kan en ammaan - புண்டாரிகாஷனான அஸ்மத் ஸ்வாமியாய் அரவு அணைமேலான்,Aravu anaimelaan - சேஷசயனத்தின் மீது கண் வளர்ந்தருள்பவனாய் என் நெஞ்சத்து,En nenjaththu - எனது நெஞ்சிலே எம்பொழுதும் நிலை பேரான்,Empozhuthum nilai peraan - ஒரு போதும் நிலைபெயராது நிரந்தரவாஸம் செய்பவனாய் மதம்மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான்,Madammikha kolaiyaanai maruppu osiththaan - மதமிகுதியினால் கொலையிலே முயன்ற குவலயாபீட யானையின் கொம்பை முறித்தவானான பெருமானுடைய எம்பெருமான்,Namberumaan - தன்னுடைய பெருமைய எமக்குக் காட்டிக் கொடுத்தவனாய் குரை கழல்கள்,Kurai kazhalgal - வீரக்கழலினோசை பொருத்திய திருவடிகளை குறுகினம்,Kuruginam - கிட்டப் பெற்றோம். |