| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3728 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (கீழ் எட்டாம்பத்தில் குட்டநாட்டுத் திருப்புலியூரெம்பெருமானுடைய திருவருள் தமக்குப் பலித்தபடியைத் தோழிபேச்சாலே வெளியிடுமளவில் *அன்றி மற்றொருபாயமென்? இவளந்தண்டுழாய் கமழ்தல் * என்ற திருத்துழாய்ப் பரிமளம் திருமேனியிலே கமழ்வதையிட்டு நிரூபித்தாராழ்வார்; இப்போது திருவாட்டாற்றெம்பெருமானுடைய திருவருள் பலித்தபடியையும் அந்த நிரூபகத்தையிட்டே தம் வாயாலே பேசுகிறார்.) 7 | குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான் திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல் விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7 | கோவிந்தன்,Govindan - கண்ணபிரான் நம் குடி கொண்டான்,Nam kudi kondaan - (அப்படி குடி கொண்டதனால்) நம்மையே தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான் . திரை குழுவு கடல் புடை சூழ்,Thirai kuzhuvu kadal pudai soozh - அலைத்திரட்சியை யுடைய கடலாலே புடை சூழப் பட்டு தென் நாடு நிலதம் அன்ள,Then naadu nilatham anla - தென்னாட்டுக்குத் திலகம் போன்றிருப்பதாய் மலர்அடி மேல்,Malar adi mel - திருவடித் தாமரைகளின் மீது சாத்தின வரை குழுவு மணி மாடம்,Varai kuzhuvu mani maadam - மலைகள் திரளவிருந்தாற் போன்றுள்ள மாடங்களை யுடைத்தான விரை குழுவு நறு துளபம்,Virai kuzhuvu naru thulabam - பரிமளம் திரண்டு கமழ்கிற திருத்துழாயானது வாட்டாற்றான்,Vaattattraan - திருவாட்டாற்றி லெழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய மெய் நின்று கமழும்,Mey nindru kamazhum - என்னுடம்பிலே நிலைநின்று வாஸிக்கின்றது. |