Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3729 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3729திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (தாம்பெற்ற பேற்றின் கனத்தை யாராய்ந்தார்; அந்தோ! இப்படிப் பட்ட விஷயீகாரம் என் திறத்தேயுண்டாகுமாறு நான் என்ன ஸுக்ருதம் செய்தேன்! ஒன்றும் செய்திலேன்! அப்படியிருக்கவும் இது என்ன விலக்ஷண விஷயீகாரம்! என்று நெஞ்சு குழைகிறார்.) 8
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8
மெய்நின்று கமழ்,Mey nindru kamazh - திருமேனியிலே நிலைநின்று கமழா நின்ற
புனல் மை நின்ற வரை போலும் திரு உருவன்,Punal mai nindra varai polum thiru uruvan - புனலையும் அஞ்சனத்தையும் நிலை நிற்கும் மலையையு மொத்திருக்கின்ற திருவுருவத்தை யுடையனான
துலபம்,Thulabam - திருத்துழாயினுடைய
வாட்டாற்றாற்கு,Vaattattraarkku - திருவாட்டாற்றெம்பெருமாளுக்கு
விரை ஏறு திரு முடியன்,Virai eru thiru mudiyan - பரிமளம் மிகப் பெற்ற திருமுடியை யுடையவனாய்,
கருதும் இடம் பொருது,Karuthum idam porudhu - திருவுள்ளம் நினைத்த விடத்தே சென்று போரை நடத்தி
எந்நன்றி செய் தேன் ஆ நான்,En nandri sei then aa naan - என்ன நன்மை செய்தேனாகக் கொண்டு
கை நின்ற,Kai nindra - உடனே திருக்கையிலே வந்து சேருகிற
சக்கரத்தன்,Sakkarathan - திருவாழிப்படையை யுடையனாய்
என் நெஞ்சில் திகழ்வது,En nenjil thigazhvadhu - அவன் எனது நெஞ்சில் விளங்குவது