Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3730 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3730திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இகழுகைக்கு வேண்டுவனவுண்டான வென்னிடத்தில் சிறிது மிகழ்வின்றியே எப்பொழுதும் பிரியாதே யிராநின்றானே! இது என்ன வியாமோஹமென்று தம்மிலே தாம் வியக்கிறார்.) 9
திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9
திகழ்கின்ற திருமார்வில்,Thigazkindra thirumaarvil - விளங்குகின்ற திருமார்பிலே
புள் ஊர்தி,Pul oorthi - பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு
திருமங்கை தன் னோடும்,Thirumangai than nodum - பெரிய பிராட்டியாரோடுங்கூட
போர் அரக்கர் குலம் கெடுத்தான்,Por arakkar kulam keduththaan - போர்லேமுயன்ற ராக்ஷஸர்களின் கூட்டங்களைத் தொலைத்த அப்பெருமான்
திகழ்கின்ற திருமாலார்,Thigazkindra thirumaalar - விளங்குகின்ற லஷிமீநாதன்
சேர்வு இடம்,Saervu idam - நித்யவாஸம் பண்ணுமிடம் என் நெஞ்சத்து எனது நெஞ்சிலே
நண் வாட்டாறு,Nan vaattaaru - குளிர்ந்த திருவாட்டாற்றுப் பதியாம்
இகழ்வு இன்றி எப்பொழுதும் பிரியாள்,Ikazhvu inri eppozhuthum priyaal - வெறுப்பின்றியே ஓகு போதும் பிரியாதேயுளன்
நின்ற புகழ்,Nindra pugazh - நிலைநின்ற புகழையுடைய