| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3730 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இகழுகைக்கு வேண்டுவனவுண்டான வென்னிடத்தில் சிறிது மிகழ்வின்றியே எப்பொழுதும் பிரியாதே யிராநின்றானே! இது என்ன வியாமோஹமென்று தம்மிலே தாம் வியக்கிறார்.) 9 | திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9 | திகழ்கின்ற திருமார்வில்,Thigazkindra thirumaarvil - விளங்குகின்ற திருமார்பிலே புள் ஊர்தி,Pul oorthi - பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு திருமங்கை தன் னோடும்,Thirumangai than nodum - பெரிய பிராட்டியாரோடுங்கூட போர் அரக்கர் குலம் கெடுத்தான்,Por arakkar kulam keduththaan - போர்லேமுயன்ற ராக்ஷஸர்களின் கூட்டங்களைத் தொலைத்த அப்பெருமான் திகழ்கின்ற திருமாலார்,Thigazkindra thirumaalar - விளங்குகின்ற லஷிமீநாதன் சேர்வு இடம்,Saervu idam - நித்யவாஸம் பண்ணுமிடம் என் நெஞ்சத்து எனது நெஞ்சிலே நண் வாட்டாறு,Nan vaattaaru - குளிர்ந்த திருவாட்டாற்றுப் பதியாம் இகழ்வு இன்றி எப்பொழுதும் பிரியாள்,Ikazhvu inri eppozhuthum priyaal - வெறுப்பின்றியே ஓகு போதும் பிரியாதேயுளன் நின்ற புகழ்,Nindra pugazh - நிலைநின்ற புகழையுடைய |