| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3731 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாதபயன் பெறலாகும்’ என்றொரு பழமொழி யுண்டாம்; அதனைத் திருவாட்டாற்றெம்பெருமான் அநுஷ்டாந பரியவஸாயி யாக்கினானென்று ஆனந்தம் பொங்கி யருளிச் செய்கிறார்.) 10 | பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே–10-6-10 | பிரியாது ஆள் செய் என்று,Priyaadhu aal sei endru - ஒருகணமும் பிரியாதிருந்து அடிமை செய்யக் கடவாயென்று அநுக்ரஹித்து ஆகம் கீண்டான்,Aagam keendaan - உடலைப் பளிந்தவனாய் (அந்த சிரமம் தீர) வாட்டாறு,Vaattaaru - திருவாட்டாற்றிலே பிறப்பு அறுத்து அற ஆள் கொண்டான்,Pirappu aruththu arra aal kondaan - ஸம்ஸாரப் பற்றைப்போக்கி மிகவும் அடிமை கொண்டவனாய் வாரி வாள் வாய் அரவு அணை மேலான்,Vaari vaal vaai aravu anai melaan - சேஷசாயியாயிருக்கு மெம் பெருமான் அன்று,Andru - முன்பொரு காலத்தில் அர் ஆகி,Ar aagi - நரசிங்க மூர்த்தியாகி இரணியனை,Iraniyanai - இரணியாசுரனுடைய பெரியார்க்கு ஆள்பட்டக்கால் பெறாத பயன் பெறும் ஆறு காட்டினள்,Periyaarkku aal pattakkaal peraadha payan perum aaru kaattinaal - பெரியவர்களுக்கு அடிமைப்பட்டால் பெறுதற்காரிய பயனையும் பெற லாகுமென்பதைக்காட்டி விட்டான் |