Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3732 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3732திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்குமதான இப்பாட்டில் ஆயிரத்துளிப்பத்துங் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்; இது பயனுரைத்ததாக எங்ஙனே யாகுமென்று சிலர்சங்கிப்பர்கள்; கேண்மின்; நித்யஸூரிகள் இப்பாசுரங்களைக் கேட்பது எவ்விதமாக? என்று பார்க்க வேணும். இங்கிருந்து போரும் முக்தர்கள் சொல்ல, அவர்களது வாய்வழியே கேட்கவேணும். ஆகவே இப்பதிகம் வல்லார் நித்யஸூரிகளைக் கேட்பிக்க வல்லவராவர் என்று பயனுரைத்ததாகவே ஆயிற்று.) 11
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11
தள் கனைகழல்கள் காட்டி,Thal kanaikazhalgal kaatti - தன் திருவடிகளைக் காட்டியருளி
பாட்டு ஆய தமிழ் மாலை ஆயிரத்துள்,Paatu aaya thamizh maalai aayirathul - பாட்டாயிருக்கிற தமிழ்த் தொடையான அயிரத்துள்
கடு நரகம் புகல் ஒழித்த,Kadu naragam pugal ozhiththa - கடுமையான ஸம்ஸாரநரக ப்ரவேசத்தை யொழித்த
செவிக்கு இனிய செம் சொல் இப்பத்தும்,Sevikku iniya sem sol ippaththum - கர்ணம்ருதமான செவ்விய சொற்களினாலாகிய இப்பதிகத்தை
வாட்டாறு எம்பெருமானை,Vaattaaru emperumaanai - திருவாட்டாற் றெம்பெருமானைக் குறித்து
வளம் குருகூர் சடகோபன்,Valam kurukoor sadagopan - ஆழ்வார் (அருளிச்செய்த)
வானவர்கள் கேட்டு ஆரா,Vaanavargal kaettu aaraa - நித்ய ஸூரிகள் முக்தர்கள் வாயிலாகக் கேட்டு திருப்தி பெறமாட்டார்கள்.