Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3738 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3738திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (திருமாலிருசோஞ்லைமலையப்பனுடைய வியாமோஹாதிசயத்தை யருளிச்செய்கிறார்.) 6
திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6
சிவனும் பிரமஎம் காணாது,Sivanum Brahma em kaanadhu - சிவனுக்கும் பிரமனுக்கு மெட்டாதேயிருந்து
அரும் மால் எய்தி அடி பரவ,Arum maal eydhi adi parava - (அவர்கள்) அருமையான பக்தியைச் செலுத்தித் திருவடிகளைத் துதிக்க
அருளை ஈந்த அம்மான்,Arulai eenda ammaan - அவாகளுக்குத் தன் திருவருளைத் தந்தருளின பெருமானாய்,
செழு மூ உலகும்,Sezhu moo ulagam - விலகூஷணமான மூவுலங்களையும்
தன் ஒருமா வயிற்றின் உள்ளே வைத்து,Than orumaa vayittrin ullae vaiththu - ஒப்பற்ற பெரிய தன் திருவயிற்றினுள்ளே வைத்து
ஊழி ஊழி தலை அளிக்கும்,Oozhi oozhi thalai alikkum - கற்பந்தோறும் நன்றாகக் காப்பாற்றுமாவனான
திருமால்,Thirumaal - திருமகள் கொழுநன்
திருமாலிருஞ் சோலையானே ஆகி என்னை ஆளும் மால்,Thirumaalirunj solaiyaanai aagi ennai aayum maal - திருமாலிருஞ் சோலையிலே நின்று கொண்டே என்னை யாட்கொள்வதில் பெரும்பித்தனாயிராநின்றான்.