| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3738 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (திருமாலிருசோஞ்லைமலையப்பனுடைய வியாமோஹாதிசயத்தை யருளிச்செய்கிறார்.) 6 | திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6 | சிவனும் பிரமஎம் காணாது,Sivanum Brahma em kaanadhu - சிவனுக்கும் பிரமனுக்கு மெட்டாதேயிருந்து அரும் மால் எய்தி அடி பரவ,Arum maal eydhi adi parava - (அவர்கள்) அருமையான பக்தியைச் செலுத்தித் திருவடிகளைத் துதிக்க அருளை ஈந்த அம்மான்,Arulai eenda ammaan - அவாகளுக்குத் தன் திருவருளைத் தந்தருளின பெருமானாய், செழு மூ உலகும்,Sezhu moo ulagam - விலகூஷணமான மூவுலங்களையும் தன் ஒருமா வயிற்றின் உள்ளே வைத்து,Than orumaa vayittrin ullae vaiththu - ஒப்பற்ற பெரிய தன் திருவயிற்றினுள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்,Oozhi oozhi thalai alikkum - கற்பந்தோறும் நன்றாகக் காப்பாற்றுமாவனான திருமால்,Thirumaal - திருமகள் கொழுநன் திருமாலிருஞ் சோலையானே ஆகி என்னை ஆளும் மால்,Thirumaalirunj solaiyaanai aagi ennai aayum maal - திருமாலிருஞ் சோலையிலே நின்று கொண்டே என்னை யாட்கொள்வதில் பெரும்பித்தனாயிராநின்றான். |