| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3739 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (இப்போது தம்முடைய ஸம்த்திக்கு அடி திருமலையாகையாலே இத்திருமலை தானே நமக்கு ப்ராப்யமென்று திருமலையைக் கொண்டாடுகிறார்.) 7 | அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7 | என் அம்மானே அருளை ஈ என்னும்,En ammaanai arulai e ennum - எம்பெருமானே! உன்னருளைத் தந்தருள்வேணும் என்று வேண்டுகிற முக்கண் அம்மானும்,Mukkan ammaanum - எம் சிவபிரானும் தெருள் கொள் பிரமன் அம்மானும்,Therul kol Brahman ammaanum - நல்லறிவு வாய்ந்த நான் முகக் கடவுளும் தேவர் கோஎம் தேவரும்,Devar koem devarum - தேவேந்திரனும் முப்பத்து மூவரமரர்களும் இருள்கள் கடியும் முனிவரும்,Irulgal kadidum munivarum - அஜ்ஞானங்களைப் போக்கவல்ல முனிவர்களும் ஏத்தும்,Aethum - துதிக்கும் படியான அம்மான்,Ammaan - எம்பெருமா னெழுந்தருளி யிருக்குமி;டமான திருமலை,Thirumalai - திருமலை எதுவென்றால்; மருள் கள் கடியும் மணிமலை,Marulgal kadidum manimalai - மருள்களை யெல்லாம் தவிக்கும் அழகியமலையான திருமாலிருஞ் சோலைமலையே,Thirumaalirunj solai malaiyae - தெற்குத் திருலையேயாகும். |