திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3741 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3741திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (இப்பாட்டில் பெரும்பாகம் ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாகவும் சிறுபாகம் எம்பெருமானை நோக்கிச் செல்லுவதாகவும் பன்னீராயிரப்பn தவிர்ந்த மற்ற வியாக்கியானங்களிலெல்லா முள்ளது. பன்னிராயிரப்படியில் மாத்திரம் பாட்டு முழுவதும் திருவுள்ளத்தையே நோக்கிச் சொல்லுவதாகவுள்ளது.) 9
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9
பதவுரை Show / Hide
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன்,Oozhi mudhalvan oruvanae ennum oruvan - ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஒருவனே காரணபூத னென்று சொல்லப்பட்ட அத்விதீயானய்
உலகு எல்லாம்,Ulaku ellam - ஸகல லோகங்களையும்
ஊழி தோறும்,Oozhi thorum - படைக்கவேண்டிய காலந்தோறும்
தன் உள்ளே,Than ullae - தன் ஸங்கல்பத்தின் ஏக தேசத்துக்குள்ளே
படைத்து காத்து கெடுத்து உழலும்,Padaiththu kaaththu keduththu uzhallum - ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்து போரு மவனாய்
ஆழி வண்ணன் என் அம்மான,Aazhi vannan en ammaan - கன்பீரஸ்வபாவனாயிருக்கின்ற எம்பெருமானுடைய
அம் தண் திருமாலிருஞ்சோலை,Am than thirumaalirunj solai - அழகிய குளிர்ந்த திருமலையை
மனமே,Maname - நெஞ்சே!
கைவிடேல்,Kaividael - கைவிடாதே
வாழி,Vaazhi - இது கொண்டு வாழ்வாயாக, எம்பெருமானே!
உடலும் உயிரும் மங்க ஒட்டு,Udalum uyirum manga ottu - எனது சாரிரமும் பிராணனும் உனது வெறுப்புக்கு இலக்காம்படி இசையவேணும்.