Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3744 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3744திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் இத்தலையில் ஸ்வல்ப வ்யாஜமாத்ரமே கொண்டு விஷயீகாரிக்கும்னென்று அவருடைய நிர்ஹேது கவிஷயீகார வைபவத்தை யருளிச் செய்கிறார்.) 1
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே–10-8-1
திருமாலிருஞ் சோலை மலை என்றேன் என்ன,Thirumaalirunch cholai malai endren enna - திருமாலிருஞ் சோலையென்று சொன்னே னென்பதையே நிமித்தமாகக் கொண்டு
திருமால்வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்,Thirumaalvandhu en nenju niraiya pugundhaan - எம்பெருமான் வந்து என்னெஞ்சினுள்ளே நிறையப் புகுத்தான்;
திருமால் சென்று சர்வு இடம்,Thirumaal sendru sarvu idam - இப்படிப்பட்ட எம்பெருமான் சென்று வாழுமிடம் (எது வென்றால்)
குரு மாமணி உந்து புனல்,Guru maamani undhu punal - மிகச்சிறந்த மாணிக்கங்களைக் கொழிக்கின்ற
பொன்னி,Ponni - காவிரி யாற்றினுடைய
தென்பால்,Thenpaal - தென்பக்கத்திலுள்ளதான்
தென் திருப்பேர்,Then thiruper - அழகிய திருப்பேர் நகராம்.