| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3744 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் இத்தலையில் ஸ்வல்ப வ்யாஜமாத்ரமே கொண்டு விஷயீகாரிக்கும்னென்று அவருடைய நிர்ஹேது கவிஷயீகார வைபவத்தை யருளிச் செய்கிறார்.) 1 | திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால் திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே–10-8-1 | திருமாலிருஞ் சோலை மலை என்றேன் என்ன,Thirumaalirunch cholai malai endren enna - திருமாலிருஞ் சோலையென்று சொன்னே னென்பதையே நிமித்தமாகக் கொண்டு திருமால்வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்,Thirumaalvandhu en nenju niraiya pugundhaan - எம்பெருமான் வந்து என்னெஞ்சினுள்ளே நிறையப் புகுத்தான்; திருமால் சென்று சர்வு இடம்,Thirumaal sendru sarvu idam - இப்படிப்பட்ட எம்பெருமான் சென்று வாழுமிடம் (எது வென்றால்) குரு மாமணி உந்து புனல்,Guru maamani undhu punal - மிகச்சிறந்த மாணிக்கங்களைக் கொழிக்கின்ற பொன்னி,Ponni - காவிரி யாற்றினுடைய தென்பால்,Thenpaal - தென்பக்கத்திலுள்ளதான் தென் திருப்பேர்,Then thiruper - அழகிய திருப்பேர் நகராம். |