திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3745 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3745திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இதுக்கு முன்பு தான் ஸர்வேச்வரனாயிருந்தும் என்னோடு கலக்கப் பெறாமையினாலே குறைவாளானாயிருந்தவன் நிர்ஹேதுகமாக என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து பூர்ணனானானனென்கிறார்.) 2
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2
பதவுரை Show / Hide
பேரே உறைகின்ற பிரான்,Pere uraikindra piraan - திருப்பேர் நகாரில் நித்திய வாஸம் பண்ணு மெம்பெருமான்
இன்று வந்து பேரேன் என்று,Inru vandhu peren endru - இன்று தானே விரும்பி வந்து இனிப் பேரமாட்டேனென்று
என் நெஞ்சு நிறைய புகுந்தான்,En nenju niraiya pugundhaan - என்னெஞ்சிலே தான் பாரிபூற்ணனாம்படி புகுந்தான்;
ஏழ்காரி ஏழ்கடல் ஏழ் மலை உலகு உண்டும்,Ezhkaari ezh kadal ezh malai ulagu undum - (ஆகவே) ஏழேழான மேகங்களும் கடல்களும் மலைகளுஞ் சூழ்ந்த உலகங்களை யெல்லாமமுது செய்தும்
ஆரா வயிற்றானை,Aaraa vayitranai - நிறையாத திருவயிற்றையுடைய அப்பெருமானை
அடங்க பிடித்தேன்,Adanga pidithen - பரிபூர்ண விஷயீகாரம செய்தானாகப் பண்ணிக் கொண்டேன்.