திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3746 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3746திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் நிர்வேஹதுகமாகத் தம்மோடே வந்து கலந்தபடியைச் சிந்தித்து இவன் திருவடி எனக்கு இப்படி எளிதானவாறு என்னே என்று வியக்கிறார்.) 3
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3
பதவுரை Show / Hide
கொடி கோபுரம் மாடங்கள் சூழ் திரு பேரான்,Kodi kopuram maadangal soozh thiru peraan - கொடிகளையுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேர் நகரை உறைவிடமாகவுடைய பெருமானுடைய
அடி சேர்வது,Adi servadhu - திருவடிகளை சேருகையாயானது
எனக்கு எளிது ஆயின ஆறு,Enakku ezhidu aayina aaru - எனக்கு எளிதான விதம் என்னே!
பிடித்தேன்,Pidiththen - அவன் திருவடிகளைப் பிடிக்கப் பெற்றேன்;
பிறவி கெடுத்தேன்,Piravi keduththen - (அது அடியாக) ஸம்ஸாரம் தொலையப் பெற்றேன்;
பிணி சாரேன்,Pini saarein - பிணிகள் வந்து அணுகாவகை பெற்றேன்;
மனை வாழ்க்கையுள்,Manai vaazhkaiyul - ஸம்ஸாரத்தில்
நிற்பது ஒர் மாயையை,Nirpadhu or maayaiyai - நிற்கையாகிற அஜ்ஞானத்தை
மடித்தேன்,Madiththen - நிவ்ருத்தமாக்கிக் கொண்டேன்.