Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3747 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3747திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (தமக்குத் திருநாட்டைக் கொடுத்தருள்பவனாயிராநின்ற எம்பெருமானுடைய படியை யநுஸந்தித்துத் தாம் களிக்குமபடியைப் பேசுகிறார்.) 4
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4
கிளி தாவிய,Kili thaaviya - கிளிகள் தாவம்படி செறிந்த
சோலைகள் சூழ்,Solaigal soozh - சோலைகளாலே சூழப்பட்ட
திரு பேரான்,Thiru peraan - திருப் பேர்நகாரில் வாழுமெம்பெருமான்,
தெளிது ஆகிய,Thelidu aagiya - தெளிந்த நிலமான
சேண் விசும்பு,Sen visumbu - பரமாகாச மென்னும் திருநாட்டை
தருவான்,Tharuvaan - தருபவனாயிராநின்றான் (ஆனது பற்றி)
என் கண்கள்,En kangal - (விடாய்த்த) எனது கண்கள்
எளிது அயின ஆறு என்று களிப்ப,Ezhidu aayina aaru endru kalippa - இந்த எளிமைக்கு ஈடுபட்டுக் களித்ததாக
களிது ஆகிய சிந்தையன் ஆய்களிக்கின்றேன்,Kalidu aagiya sindhaiyan aaykalikkindren - பரமானந்த சாலியான நெஞ்சையுடையேனாயினேன்.