| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3747 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (தமக்குத் திருநாட்டைக் கொடுத்தருள்பவனாயிராநின்ற எம்பெருமானுடைய படியை யநுஸந்தித்துத் தாம் களிக்குமபடியைப் பேசுகிறார்.) 4 | எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக் களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன் கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான் தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4 | கிளி தாவிய,Kili thaaviya - கிளிகள் தாவம்படி செறிந்த சோலைகள் சூழ்,Solaigal soozh - சோலைகளாலே சூழப்பட்ட திரு பேரான்,Thiru peraan - திருப் பேர்நகாரில் வாழுமெம்பெருமான், தெளிது ஆகிய,Thelidu aagiya - தெளிந்த நிலமான சேண் விசும்பு,Sen visumbu - பரமாகாச மென்னும் திருநாட்டை தருவான்,Tharuvaan - தருபவனாயிராநின்றான் (ஆனது பற்றி) என் கண்கள்,En kangal - (விடாய்த்த) எனது கண்கள் எளிது அயின ஆறு என்று களிப்ப,Ezhidu aayina aaru endru kalippa - இந்த எளிமைக்கு ஈடுபட்டுக் களித்ததாக களிது ஆகிய சிந்தையன் ஆய்களிக்கின்றேன்,Kalidu aagiya sindhaiyan aaykalikkindren - பரமானந்த சாலியான நெஞ்சையுடையேனாயினேன். |