Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3748 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3748திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (திருப்பேர் நகரான் எனக்குத் திருநாடு தருவதாகச் சபதம் செய்து விரோதிகளையும் போக்கியருளிச் னென்கிறார்.) 5
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரான்,Then yey pozhi then thirupper nagaraan - வண்டுகள் செறிந்த சோலைகளையுடைய திருப்பேர் நகாரிலுறையும் பெருமான்
எனக்கு வானே தருவான்,Enakku vaane tharuvaan - எனக்கு (இன்று) திருநாடு தந்தருள்பவனாய் ஸங்கல்பித்துக்கொண்டு
என்னோடு ஒட்டி,Ennodu otti - என்னோடே ப்ரததிஜ்ஞை பண்ணி
ஊன் ஏய் குரம்பை இதனாள்,Oon yey kurambai idhanaal - மாம்ஸளமான இந்த சாரிரத்தினுள்ளே
இன்று தானே புகுந்து,Indru thaane pugundhu - இன்று தானே வந்து புகுந்து
தடுமாற்றம் வினைகள் தவிர்த்தான்,Thadumaadram vinaigal thavirthaan - தன்னைத் பிரிந்து தடுமாறு கைக்கூடியான புண்யபாவங்களைப் போக்கி யருளினான்.